districts

img

வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி, பயிற்சி முகாம்

மயிலாடுதுறை, ஜூன் 29 - மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ  கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல  தினம் நியூஸ் தொண்டு அமைப்பு (கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் சனிக்கிழமை நடை பெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சிய ரின் வழிகாட்டுதலின்பேரில், ‘நியூஸ்’ (இயற்கை சுற்றுச்சூழல் வனவிலங்கு சங்கம்) என்ற தொண்டு அமைப்பு சார்பில், கிரீன் டிஎன் மிஷன் திட்டத்தின் கீழ்  மயிலாடுதுறை மாவட்ட கடலோரப்  பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக வானகிரி அர சினர் உயர்நிலைப் பள்ளியில் மாணவர் கள், பொதுமக்கள் இடையே அலை யாத்தி காடுகள் வளர்ப்பின் அவசியம்  குறித்தும், அலையாத்தி காடுகள் சந்திக்கும் ஆபத்துகள் குறித்தும், அலையாத்தி காடுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பள்ளி தலைமை யாசிரியர் ரவிச்சந்திரன் முன்னிலை யில் சிறப்புப் பயிற்சி முகாம் நடை பெற்றது. 

பயிற்சி முகாமை தொடர்ந்து, சதுப்பு  நில காடுகளின் பாதுகாப்பை வலி யுறுத்தியும், காடுகளால் ஏற்படும் நன்மைகளை வலியுறுத்தியும் விழிப்பு ணர்வு பதாகைகளை ஏந்தி மாண வர்கள், பெண்கள், பொதுமக்கள் முழக் கங்களை எழுப்பியவாறு பள்ளி வளா கத்திலிருந்து கடற்கரையை நோக்கி முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்றனர். 

தொடர்ந்து அலையாத்தி காடு களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு  பலகையை நியூஸ் அமைப்பினர் முன்னிலையில், மீனவ பஞ்சாயத்தார் திறந்து வைத்தார். 200-க்கும் மேற்பட்ட  மாணவர்கள், கிராம பொதுமக்கள், வானவில் மகளிர் சுய உதவி குழு  பெண்கள் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சி களில் பங்கேற்றனர்.

கடலோர கிராமங்களை கடலரிப்பி லிருந்து பாதுகாக்கும் நோக்கில், சுனாமி பேரழிவுக்குப் பின் இழந்த பசு மையை மீட்டெடுக்கும் முயற்சியில் நியூஸ் தொண்டு நிறுவனம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சந்திரபாடி, சின்னங்குடி, வானகிரி, கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ளிட்ட  கடலோரக் கிராமங்களில் அலையாத்தி மரங்களை 100 ஹெக்டேரில் நடவு செய்து வருகிறது. 

குறிப்பாக கிராமப் பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து அந்த மரக்கன்று களை நாள்தோறும்  பராமரித்து பாது காத்து வருகிறது. வானகிரி கிராமத்தில்  அதிகளவில் அலையாத்தி மரக்கன்று கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.